கனிகொடுக்கும் வாழ்வின் இரகசியம்
வேதப்பகுதி : யோவான் 15:5-11
நண்பர்களும் அறிமுகமானவர்களும் நம்மை விட்டு கடந்து போகும்போது, நாம் அவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்ந்தபோது அவர்கள் ஏற்படுத்தியதாக்கத்தைப் பற்றியும் எண்ணி கனிதரும் வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறுகிறோம். நாம் வேறு சிலரை பற்றி சிந்திக்கும் போது, அவர்களின் வாழ்க்கைவீணாகிவிட்டது என்று கூறுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் அல்ல, ஆனால் அந்த தாக்கம்மனிதகுலத்திற்கு சாதகமாகவோ அல்லது பிரயோஜனமாக இல்லை என்பதாலேயே!
அப்படியானால், கனிகொடுக்கும் வாழ்வின் இரகசியம் என்ன?
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அளிக்கும் அழைப்புகளில் ஒன்று யோவான் 15 ம் அதிகாரத்தில் உள்ளது, "என்னில் நிலைத்திருங்கள்" (V 5) ஒருகிளையானது செடியுடன் இணைந்து இராவிட்டால் கனி தர முடியாது என்பது போல, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்காவிட்டால் பலனளிக்கும் வாழ்க்கையைவாழ முடியாது.
நிலைத்திருப்பதைப் பற்றி மூன்று காரியங்களை இயேசு கூறுகிறார்.
முதலாவதாக, "என்னில் நிலைத்திருங்கள்" (v5). நமது சொந்த திறன்களை நம்பியிருக்கும்போது, நாம் பலவீனமடைந்து பலனற்றவர்களாக மாறுகிறோம். ஆனால் நாம் தினமும் கிறிஸ்துவைச் சார்ந்திருக்கும்போது, அவருடைய ஜீவன் நமக்குள்ளாகப் பாய்கிறது.
இரண்டாவதாக, "என் வார்த்தைகளில் நிலைத்திருங்கள்" (V 7) கடவுளுடைய வார்த்தை நம் ஆத்துமாவை பராமரிக்கிறது, நம் வாழ்க்கையை வழிநடத்துகிறது. நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, தியானம் செய்யும்போது, கீழ்ப்படியும்போது, நம் மனம் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் நமது ஜெபம் கடவுளின்சித்தத்திற்கு ஏற்றவாறு அமைகிறது.
மூன்றாவதாக, "என் அன்பில் நிலைத்திருங்கள்" (V 9) கிறிஸ்துவின் அன்பு என்பது நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக மட்டுமல்ல; நாம் பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது. "சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்றுஇயேசு போதித்தார். மேலும் 1 யோவான் 4:20-21 நாம் தேவனிடத்தில் அன்புகூறுகிறோமென்று, சொல்லும்போது சகோதர, சகோதரிகளைவெறுக்கிறோமென்று சொல்ல முடியாது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பது என்பது நம்மை காயப்படுத்துபவர்களைமன்னிப்பது , நம்மை எதிர்ப்பவர்களை ஆசீர்வதிப்பது ஆகும் (மத் 5:44)
இந்த வகையான அன்பு இயற்கையானது அல்ல; அது கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையின் கனியாகும். நாம் அவரில் நிலைத்திருக்கும்போது, அவருடைய குணாதிசியங்கள் நமக்குள் உருவாகிறது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவைப் போல் ஆகிறோம்.
என் நண்பரே, கிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தைகளிலும் நிலைத்திருப்பதன் விளைவு ஒரு பெரிய ஆசீர்வாதம். அப்போதுதான் நம் வாழ்கை ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும். நம் வாழ்க்கை கனிகொடுத்து, கடவுளை மகிமைப்படுத்தும்.
ஜெபம்:- ஆண்டவரே, உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் மூலம் ஒவ்வொரு நாளும் உம்மோடு நெருக்கமாக இருக்க எனக்குக் கற்றுக் கொடுங்கள். என்இதயத்தை உங்கள் அன்பால் நிரப்புங்கள். கனி கொடுக்க எனக்கு உதவுங்கள். ஆமென்!.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
